“மனம் தளர்ந்து விடாதீர்கள்!” - பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ராமதாஸ் அறிவுரை


சென்னை: ‘12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் வென்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுகள்! தவறியோர் மீண்டும் எழுதி வெல்ல வாழ்த்துகள்!’ என பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்தின்படியான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92,494 மாணவர்களில் 95.03% மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் அறிவுரை, மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பதுதான். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று உயர் கல்வி யை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகள்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

x