கொழும்புவில் இருந்து நேற்று திருச்சி வந்த விமானத்தின் இறக்கையில் பறவை சிக்கியது. எனினும், விமானி சாதுர்யமாக விமானத்தை இயக்கி பத்திரமாக திருச்சியில் தரையிறக்கிதால், அதில் வந்த 89 பயணிகளும் உயிர் தப்பினர்.
இலங்கை தலை நகர் கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. பின்னர், அந்த விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு திருச்சியில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால், தொழில் நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விமானம் தாமதமாக புறப்பட என்ன காரணம் குறித்து விசாரித்த போது, "நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, விமானத்தின் இறக்கையில் பறவை சிக்கியுள்ளது. எனினும், விமானி சாதுர்யமாக விமானத்தை இயக்கி பத்திரமாக திருச்சியில் தரையிறக்கினார். இதனால், அந்த விமானத்தில் வந்த 89 பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
விமானம் தரை இறங்கிய பின்னர், இறக்கையில் சிக்கிய பறவையின் உடல் உள்ளிட்ட பாகங்கள் அகற்றப்பட்டன. ரத்தச் சிதறல்கள் துாய்மைப் படுத்தப் பட்டன. இதையடுத்து, அந்த விமானம் மதியம் 1 மணிக்கு 180 பயணிகளுடன் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது.