யானை நடமாட்டம்: தொட்டபெட்டாவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 2-ம் நாள் தடை!


குன்னூர் பர்லியாறு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை, கடந்த 5ம் மாலை குன்னூரில் இருந்து பல கிலோ மீட்டர் வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள், பல கிராமங்களை கடந்து ஊட்டி தொட்டபெட்டா பகுதிக்குள் நுழைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகளை பாதுகாப் பாக வனத் துறையினர் வெளியேற்றினர். தொட்டாபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் தடுமாறி வருகின்றனர். இந்நிலையில், யானை நடமாட்டம் காரணமாக நேற்று 2-வது நாளாக தொட்டபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

தற்போது கோடை சீசன் நடந்து வருவதால் ஊட்டியில் திரண்ட பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள், தொட்டபெட்டாவுக்கு செல்ல முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். சின்கோனா பகுதியில் முகாமிட்டுள்ள யானையை வனப்பகுதிக்குள் விரட்டலாமா? அல்லது மயக்க மருந்து செலுத்தி பிடிக்கலாமா? என வனத் துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

x