விழுப்புரம்: விழுப்புரம் காவல் சரகத்தில் 16 காவல் நிலையங்களுக்கு புதிய ஆய்வாளர்களை நியமித்து டிஐஜி திஷா மிட்டல் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “விழுப்புரம் காவல் சரகத்தில் 6 உதவி ஆய்வாளர்களுக்கு, ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆய்வாளராக சத்தியசீலன், விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக சத்யா, கோட்டக்குப்பம் ஆய்வாளராக அறிவழகி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளராக ஆனந்தி, கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி ஆய்வாளராக பிரேம்குமார், கடலூர் முதுநகர் ஆய்வாளராக கதிரவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் 12 ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஆய்வாளராக பாண்டியன், சத்தியமங்கலம் ஆய்வாளராக சுரேஷ் பாபு, செஞ்சி ஆய்வாளராக ஹரி கிருஷ்ணன், கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை ஆய்வாளராக பார்த்த சாரதி, குள்ளஞ்சாவடி ஆய்வாளராக பாண்டிசெல்வி, ராம நத்தம் ஆய்வாளராக பிருந்தா, மாவட்ட குற்றப்பதிவேடு ஆவண காப்பக ஆய்வாளராக ரேவதி, பெண்ணடம் ஆய்வாளராக ராஜா ராமன், வேப்பூர் ஆய்வாளராக குண பாலன், விருத்தாசலம் மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளராக தாரகேஸ்வரி ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.