மின் கம்பி உரசி காயமடைந்த குரங்கு: மீட்டு சிகிச்சையளித்த மருத்துவர் - புதுச்சேரி நெகிழ்ச்சி


புதுச்சேரி: தட்டாஞ்சாவடி பகுதியில் மின் கம்பியில் பெண் குரங்கு ஒன்று அடிபட்டு நடக்க முடியாமல் கிடப்பதாக புதுச்சேரி வனத்துறை அலுவலகத்துக்கு புகார் வந்தது.

இதன் பேரில் கால்நடை இணை இயக்குநர் மருத்துவர் குமரன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்து குரங்கை கூண்டு வைத்து பிடித்தனர். பின்பு அந்த குரங்கை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து மயக்க ஊசி செலுத்தி அதற்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து, குணமடைந்தவுடன் மயிலம் காட்டில் குரங்கு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

x