புதுச்சேரி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உயிரிழந்த நிலையில், புதுச்சேரி நீதிமன்றங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல உயர்நீதிமன்றத்தின் கீழ் உள்ள புதுவை நீதிமன்றத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் பணியிலிருந்த நீதிபதிகள் இந்த உத்தரவை தொடர்ந்து வழக்குளை விசாரிப்பதை நிறுத்தினர். நீதிமன்ற ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மறைவுக்கு நீதிபதிகள், வக்கீல்கள் சங்கத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.