காட்டுமன்னார்கோவில்: வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது நடராஜர் சிலை கண்டெடுப்பு


கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் முகம்மது அப்சர் (35) என்பவர் புதிய வீடு கட்டுவதற்கு நேற்று அஸ்திவாரம் தோன்டினார். அந்தப் பள்ளத்தில் சுமார் மூன்று அடி உயரமுள்ள நடராஜர் சிலை. சிதைந்த நிலையில் திருவாச்சி. அஸ்தி தேவர், 1 அடி பிரதோஷ நந்தி உள்ளிட்ட சிலைகள் கண் டெடுக்கப்பட்டன.

பஞ்சலோக சிலைகளா ?: இது குறித்து தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அனைத்து சிலைகளையும் கைப்பற்றி போலீஸ் பாதுகாப்புடன் காட்டு மன்னார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வேறு சிலைகள் ஏதாவது இருக்கிறதா என்று தோன்டும் பணியில் போலீஸார் ஈடுபட்டு ள்ளனர். இந்த சிலைகள் அனைத்தும் பஞ்சலோக சிலைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

x