36 பனைமரங்களின் மீது ஆசிட் ஊற்றி அழித்தவர் மீது வழக்கு: சாத்தான்குளம் அருகே அதிர்ச்சி


தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே 36 பனை மரங்களை ஆசிட் ஊற்றி கருக வைத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன் விளை கிராமத்தில் ஹெர்சோன் சோரன் என்பவரது நிலத்தில் உள்ள 36 பனை மரங்கள் திடீரென கருகி காணப்பட்டன. அப்பகுதி விவசாயிகள், ஆட்சியருக்கு புகார் தெரிவித்தனர். சாஸ்தாவிநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார், தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதவி ஆய்வாளர் பொண்ணு முனியசாமி விசாரணை நடத்தியதில் பனை மரங்களை ஆசிட் ஊற்றி, பட்டுப்போகச் செய்தது தெரியவந்துள்ளது. நில உரிமையாளர் ஹெர்சோன் சோரன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ரியல் எஸ்டேட் தொழிலுக்காக பனை மரங்களை பட்டுப்போக செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

x