பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ள திருமாவளவனை கண்காணிக்க வேண்டும்: ஹெச்.ராஜா வலியுறுத்தல்


படம்: நா.தங்கரத்தினம்

திண்டுக்கல்: பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக அறிக்கை விடும் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரை கண்காணிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு பேசினார். இதில் தீவிர தாக்குதலை கண்டித்து பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் மனிதகுலத்துக்கு எதிரானது. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கை விடுகின்றனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ள திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினரை கண்காணிக்க வேண்டும். 2013ல் மன்மோகன் சிங் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. இதை தடுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது மட்டுமே தீர்வு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை சிவகங்கை அரண்மனை வாசலில் பாஜக சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாண்டித் துரைதலைமைவகித்தார். மாவட்டத் தலைவர் மேப்பல்சக்தி, நகரத் தலைவர் உதயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஹெச்.ராஜா பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வரும் பாகிஸ் தானுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதே வழி. சிந்து நதிநீர் பகிர்வு நிறுத்தப்பட்டதால், அந்த நாட்டில் விவசாயம்,மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதற்கு மேலும் திருந்தா விட்டால், இந்திய அரசு கார்கில் போர் போன்று மினியுத்தம் நடத்தும். மதுரை ஆதீனம் விவகாரத்தில் அவர் சொல்வதைத்தான் நம்பு வேன். தமிழக காவல் துறை சொல்வதை நம்ப முடியாது. கோயில் நிலங்களை திமுகவினர் அபகரித்து வைத்துள்ளது குறித்து ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

x