தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்


சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்​குதல்​கள் மீண்​டும் நிகழாமல் தடுக்​க​வும், இலங்கை கடற்​படை​யால் கைப்​பற்​றப்​பட்ட மீன்​பிடிப் படகு​களை உடைத்து வேறு தேவை​களுக்கு பயன்​படுத்​து​வதை தடுக்​க​வும் தேவை​யான நடவடிக்​கைகளை எடுக்​கும்​படி, மத்​திய அமைச்​சர் எஸ்​.எஸ்​.ஜெய்​சங்​கருக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று எழு​திய கடிதம்: சமீப கால​மாக இந்​திய மீனவர்​கள் மீது அடை​யாளம் தெரி​யாத இலங்​கை​யைச் சேர்ந்த நபர்​களால் தாக்​குதல் நடத்​தப்​படும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. கடந்த மே 2- ம் தேதி நாகப்​பட்​டினம் மாவட்​டத்​தின் கடலோர கிராமங்​களைச் சேர்ந்த 23 மீனவர்​கள் மற்​றும் அவர்​களது 5 நாட்​டுப் படகு​கள் கடலில் அடை​யாளம் தெரி​யாத இலங்​கை​யைச் சேர்ந்​தவர்​களால் வெவ்​வேறு சம்​பவங்​களில் தாக்​கப்​பட்​டனர்.

அவர்​களின் ஜிபிஎஸ் கருவி​கள், கைப்​பேசிகள், வி.எச்​.எப் உபகரணங்​கள், ஐஸ் பெட்​டிகள், இயந்​திர பாகங்​கள், இன்​வெர்ட்​டர் பேட்​டரி​கள், அடுப்​பு, சுமார் 470 கிலோ மீன்​பிடி வலைகள், தங்​கம் மற்​றும் வெள்ளி நகைகள் போன்ற தனிப்​பட்ட உடமை​களும் பறிக்​கப்​பட்​டுள்​ளன. மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்தை பாதிக்​கும் இது​போன்ற சம்​பவங்​கள் மீண்​டும் நிகழாமல் இருக்​க​வும், தாக்​குதல் நடத்​தி​ய​வர்​கள் இது​போன்ற செயல்​களில் ஈடு​படு​வதைத் தடுக்​க​வும், இந்​தி​யா​விலும் இலங்​கை​யிலும் உள்ள தொடர்​புடைய அதி​காரி​களிடம் இப்​பிரச்சினையை எடுத்​துச் சென்று உரிய நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

இலங்கை மீன்​பிடி மற்​றும் நீரியல் வளங்​கள் துறை பரிந்​துரைக்கு ஏற்ப, செயற்கை பவளப்​பாறை அமைப்​பு​களை உரு​வாக்​கும் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, 2022 மற்​றும் 2023 -ம் ஆண்​டுகளில் இந்​திய மீனவர்​களிட​மிருந்து இலங்கை பறி​முதல் செய்த 34 மீன்​பிடிப் படகு​களை உடைத்து கடலில் மூழ்​கடிக்க உள்​ளது.

இதை தடு​த்தது, தமிழக மீனவர்​களிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட படகு​களை இலங்கை அரசு திரும்ப ஒப்​படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். மேலும், நேற்​றைய நில​வரப்​படி, தமிழக மீனவர்​களுக்​குச் சொந்​த​மான 229 மீன்​பிடிப் படகு​கள் இலங்கை அரசின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளன. இலங்கை நீதி​மன்​றங்​களால் விடுவிக்​கப்​பட்ட 12 மீன்​பிடி படகு​களு​டன் 101 மீனவர்​களை​யும், 14 மீட்​புப் படகு​கள் மூலம் இந்​தி​யா​வுக்கு கொண்​டு​வதற்கு ஏற்​கெனவே தமிழக அரசு மத்​திய அரசுக்கு அனுப்​பி​யுள்ள கருத்​துரு​வுக்கு மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் விரை​வில் நடவடிக்கை எடுத்து உதவுமென்று நம்​பு​கிறேன்.

இந்த முக்​கியப் பிரச்​சினை​களை இலங்கை அரசிடம் எடுத்​துச் சென்​று, இந்​திய மீனவர்​களின் பாது​காப்பை உறுதி செய்​ய​வும், இது​போன்ற தாக்​குதல்​கள் மீண்​டும் நடை​பெறாமல் தடுக்​க​வும், கைப்​பற்​றப்​பட்ட மீன்​பிடிப் படகு​களை சேதப்​படுத்தி கடலில் மூழ்​கடிப்​ப​தைத் தடுக்​க​வும், இலங்கை அரசால் கைது செய்​யப்​பட்ட மீனவர்​களை​யும் 229 மீன்​பிடிப் படகு​களை​யும் மீட்​டுக்கொண்டு வரு​வதற்​குத் தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் விரைந்து எடுக்க வேண்​டும். இவ்​வாறு கடிதத்​தில்​ முதல்​வர்​ தெரி​வித்​துள்​ளார்​.

x