காரைக்குடி அருகே அரசு பேருந்து, பால் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு


சிவகங்கை: காரைக்குடி அருகே அரசு பேருந்து, பால் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயம் காயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு இன்று (மே 6) அதிகாலை அரசு பேருந்து சென்றது. அதேசமயம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி பால் ஏற்றி வந்த சரக்கு வாகனம் சென்றது. காரைக்குடி தேனாற்று பாலம் அருகே வந்த போது அரசு பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நேர் மோதின.

இதில் பால் வாகனத்தில் இருந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், கருணா, தமிழ்பாண்டியன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 13 பயணிகள் உட்பட 16 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த பால் வாகன ஓட்டுநர் ரூபன், அரசு பேருந்து ஓட்டுநர் நாகராஜ், நடத்துநர் செல்வேந்திரபிரசாத் ஆகிய மூவரும் மதுரைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்ற 13 பேரும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

x