காரைக்கால்: கடல் சீற்றத்தால் படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு


காரைக்கால்: காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில், இவர், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர் சைந்தவன் (19) உள்ளிட்ட 5 மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீன் பிடித்துவிட்டு கரை திரும்பியபோது, கடல் சீற்றம் காரணமாக படகு தள்ளாடியபோது மீனவர் சைந்தவன் கடலில் தவறி விழுந்து மாயமானார்.

தொடர்ந்து மீனவர்கள் தேடியும் சைந்தவன் கிடைக்கவில்லை. இந்நிலையில், காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் மீனவர் சைந்தவனின் உடல் கரையொதுங்கியது. இது குறித்து காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

x