மேட்டூர் அணை நீர்வரத்து 4,105 கனஅடியாக அதிகரிப்பு


நீர்​மட்​டம் 108.12 அடி​யாக உள்ள நிலை​யில் கடல்​போல காட்​சி​யளிக்​கும்​ மேட்​டூர்​ அணை.

மேட்​டூர்​/தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 4,105 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து கடந்த 1-ம் தேதி விநாடிக்கு 1,363 கனஅடி​யாக​வும், 2-ம் தேதி 2,323 கன அடி​யாக​வும், நேற்று முன்​தினம் 3,619 கனஅடி​யாக​வும் இருந்​தது. இந்​நிலை​யில், நேற்று நீர்​வரத்து விநாடிக்கு 4,105 கன அடி​யாக அதி​கரித்​தது.

நீர்மட்டம் 108 அடி: அணை​யில் இருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. தண்​ணீர் திறப்​பை​விட நீர்​வரத்து அதி​க​மாக உள்​ள​தால் நீர்​மட்​டம் உயர்ந்து வரு​கிறது.

இதையடுத்து, மேட்டூர் அணை நீர்​மட்​டம் 107.95 அடி​யில் இருந்து 108.12 அடி​யாக​வும், நீர் இருப்பு 75.52 டிஎம்​சி​யில் இருந்து 75.76 டிஎம்​சி​யாக​வும் உயர்ந்​துள்​ளது. இதனிடையே, தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 6,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று மாலை 4,000 கனஅடி​யாக குறைந்​தது.

x