ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 29-ம் தேதி காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக பதிவானது. ஆனால், 30-ம் தேதி காலையில் விநாடிக்கு 2,500 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. 1-ம் தேதியும் விநாடிக்கு 2,500 கனஅடியாகவே நீர்வரத்து தொடர்ந்தது.
இந்நிலையில் 2-ம் தேதி விநாடிக்கு 4,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து மேலும் அதிகரித்து விநாடிக்கு 6,000 கனஅடியாக பதிவானது.