துறைமுக ஊழியர்கள் மே 20-ம் தேதி வேலைநிறுத்தம்


கோப்புப் படம்

சென்னை: துறை​முக ஆணைய சட்​டத் திருத்த மசோ​தாவை கண்​டித்து வரும் 20-ம் தேதி நாடு முழு​வதும் வேலைநிறுத்த போராட்​டம் நடை​பெறும் என்று இந்​திய நீர்​வழி போக்​கு​வரத்து ஊழியர்​கள் கூட்​டமைப்பு அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சம்​மேளன பொது செய​லா​ளர் நரேந்​திர ராவ் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: துறை​முகங்​களின் வளர்ச்​சி,பொருளா​தார நலன்களை பாதிக்கும் துறை​முக ஆணைய திருத்த மசோதா 2025-ஐ மத்​திய அரசு உடனே திரும்ப பெற வேண்​டும். இந்த கோரிக்​கையை வலி​யுறுத்தி மே 20-ம் தேதி வேலைநிறுத்த போராட்​டத்​தில் ஈடுபட உள்​ளோம். சென்​னை, தூத்​துக்​குடி, மும்​பை, கொல்​கத்​தா, கோவா உள்​ளிட்ட 12 துறை​முகங்​களில் பணி​யாற்​றும் 20 ஆயிரம் ஊழியர்​கள் இதில் பங்​கேற்​பார்​கள். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

x