சென்னை: துறைமுக ஆணைய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து வரும் 20-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று இந்திய நீர்வழி போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சம்மேளன பொது செயலாளர் நரேந்திர ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துறைமுகங்களின் வளர்ச்சி,பொருளாதார நலன்களை பாதிக்கும் துறைமுக ஆணைய திருத்த மசோதா 2025-ஐ மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 20-ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சென்னை, தூத்துக்குடி, மும்பை, கொல்கத்தா, கோவா உள்ளிட்ட 12 துறைமுகங்களில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்கள் இதில் பங்கேற்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.