கோத்தகிரி காய்கறிகள் கண்காட்சி: 2.5 டன்‌ காய்கறிகளால்‌ ‘ஜல்லிகட்டு காளை’ உருவமைப்பு!


கோத்தகிரி: கோத்தகிரி காய்கறிகள் கண்காட்சியில் 2.5 டன்‌ காய்கறிகளால்‌ ‘ஜல்லிகட்டு காளை’உருவமைப்பு சுற்றுலாப்பபணிகளை கவர்ந்து.

நீலகிரி மாவட்டத்தில்‌ சுற்றுலாப்‌ பயணிகள்‌ மற்றும்‌ பொதுமக்களை உற்சாகப்படுத்தவும்‌ அவர்களை ஈர்க்கவும்‌ தோட்டக்கலைத்துறையின்‌ மூலம்‌ மே மாதத்தில்‌ கோடை காட்சிகளான காய்கறி காட்சி, வாசனை திரவியக்காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி மற்றும்‌ காட்டேரி பூங்காவில்‌ முதல்‌ முறையாக மலைப்பயிர்கள்‌ காட்சி போன்று பல்வேறு விதமான காட்சிகள்‌ நடைபெறுகிறது.

இதனைத்‌ தொடர்ந்து 2025ம்‌ ஆண்டு கோடைக்காட்சிகளின்‌ தொடக்கமாக இன்று கோத்தகிரி, நேரு பூங்காவில்‌ மாவட்ட. ஆட்சியர்‌ லட்சுமி பவ்யா தலைமையில்‌ நீலகிரி மாவட்ட கோடை தொடக்க விழா மற்றும்‌ 43-வது காய்கறி காட்சி தொடக்கி வைக்கப்பட்டது. குழந்தைகள்‌, பொது மக்கள்‌ மற்றும்‌ சுற்றுலாப்பயணிகள்‌ அனைவரையும்‌ கவரும்‌ வகையில்‌ 2.5 டன்‌ காய்கறிகளால்‌ ஆன பாரம்பரியமான ‘ஜல்லிக்கட்டு காளை’ உருவமைப்பு கத்தரிக்காய்‌, உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும்‌ கேரட்‌ ஆகிய காய்கறிகளால்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, உருளைக்கிழங்கினால்‌ ஆன சிலம்பாட்டம்‌, காரட்‌ மற்றும்‌ பீட்ரூட்‌ ஆகிய காய்கறிகளால்‌ ஆன தமிழ்‌ மறவன்‌ பட்டாம்பூச்சி, கத்தரிக்காய்‌, கோவக்காய்‌ மற்றும்‌ பஜ்ஜி மிளகாய்‌ ஆகிய காய்கறிகளால்‌ வடிவமைக்கப்பட்ட மரகத புறா, பச்சை மிளகாய்‌, சிகப்பு மிளகாயினால்‌ வடிவமைக்கப்பட்ட பச்சைக்கிளி மற்றும்‌ சுக்கினி, கோவக்காய்‌, பச்சை, சிவப்பு மிளகாய்‌, முள்ளங்கி, காரட்‌ ஆகிய காய்கறிகளால்‌ ஆன தஞ்சாவூர்‌ பொம்மை போன்ற சிறிய உருவங்கள்‌ வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, ஈரோடு, தேனி, திருவண்ணாமலை மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களின்‌ தோட்டக்கலைத்‌துறையினரால்‌ அவர்தம்‌ மாவட்டங்களின்‌ சிறப்பினை பறைசாற்றும்‌ வகையில்‌ திடல்கள்‌ காய்கறிகளால்‌ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு காய்கறிகள் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் வியந்து கண்டு களித்தனர். கண்காட்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சிபிலா மேரி, குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

x