ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 4,000 கனஅடியாக அதிகரிப்பு


தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் கடந்த 29-ம் தேதி காலை விநாடிக்கு 3,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து 30-ம் தேதி 2,500 கனஅடி​யாக குறைந்​தது. மே 1-ம் தேதி​யும் அதே அளவுடன் நீர்​வரத்து தொடர்ந்​தது. இந்​நிலை​யில், நேற்று காலை நீர்​வரத்து விநாடிக்கு 4,000 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது.

இதனிடையே, மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 1,363 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 2,323 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணையி​லிருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. அணை நீர்​மட்​டம் 107.81 அடி​யாக​வும், நீர் இருப்பு 75.33 டிஎம்​சி​யாக​வும்​ இருந்​தது.

x