நாய்களை பராமரிக்க 72 காப்பகங்கள்: முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு


சென்னை: நோய்​வாய்ப்​பட்ட, காயமடைந்த, வயதான நாய்​களை பராமரிக்க, தமிழகம் முழு​வதும் 72 காப்​பகங்​கள் அமைக்​கப்​படும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் நடந்த ஆலோ​சனை கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.

தமிழகத்​தில் தெரு​நாய்​களை கட்​டுப்​படுத்​து​வதற்​கான ஆலோ​சனைக் கூட்​டம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்​பிரமணி​யன், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், ஊரக வளர்ச்​சித்​துறை செயலர் ககன்​தீப்​சிங் பேடி, நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் கார்த்​தி​கேயன், நிதித்​துறை செயலர் உதயச்​சந்​திரன், சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், கால்​நடைத்​துறை செயலர் நா.சுப்​பையன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்சை மேற்​கொள்ள 500 மருத்​து​வர்​களுக்கு தேவை​யான பயிற்​சிகள் வழங்​கப்​படும். உள்​ளாட்சி அமைப்​பு​களில் 500 பேருக்கு நாய்​களை பிடிப்​ப​தற்​கான பயிற்சி வழங்​கப்​படும். மாநிலம் முழு​வதும் 100 அரசு கால்​நடை மருத்​து​வ​மனை​களில் உள்​கட்​டமைப்பை மேம்​படுத்​தி, விலங்​கு​கள் இனப்​பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்​யும் வசதி​கள் உரு​வாக்​கப்​படும்.

உள்​ளாட்சி அமைப்​பு​கள்: கைவிடப்​பட்ட, நோய்​வாய்ப்​பட்ட, காயமடைந்த, வயதான மற்​றும் ஊனமுற்ற நாய்​களுக்​காக 72 காப்​பகங்​கள் அமைக்​கப்​படும். காப்​பகங்​கள் அமைப்​ப​தற்​கான இடம் உள்​ளாட்சி அமைப்​பு​களால் வழங்​கப்​படும். தொண்டு நிறு​வனங்​கள் இக்​காப்​பகங்​களை பராமரிக்​கும் பணியை மேற்​கொள்​ளும். இதற்கு தேவை​யான நிதி ஒதுக்​கப்​படும். விலங்​கு​கள் இனப்​பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்​கொள்ள வசதி இல்​லாத பகு​தி​களில் கூடு​தலாக அறுவை சிகிச்சை மையங்​கள் மற்​றும் அத்​துடன் இணைந்த நாய் காப்​பகங்​கள் கால்​நடை மருத்​துவ வசதி​களு​டன் அமைக்​கப்​படும்.

புதிதாக 10 மையங்கள்: ஒவ்​வொரு உள்​ளாட்சி அமைப்​பிலும் உள்​ளூர் கண்​காணிப்பு குழு அமைத்து நாய் இனப்​பெருக்க கட்​டுப்​பாட்டு பணி​களை தீவிர​மாக மேற்​கொள்​ள​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. பெருநகர சென்னை மாநக​ராட்​சி​யில் ஏற்​கெனவே 5 மையங்​கள் செயல்​படும் நிலை​யில், புதி​தாக 10 நாய் இனப்​பெருக்க கட்​டுப்​பாடு மையங்​கள் உரு​வாக்​கும் பணி​களை விரைந்து முடிக்​க​வும், இத்​துடன் இணைந்து 10 புதிய கால்​நடை மருத்​து​வ​மனை​கள் தொடங்​க​வும் சென்னை மாநக​ராட்சி நடவடிக்கை எடுக்க அறி​வுறுத்​தப்​பட்​டது.

அதி​கரித்​து​வரும் நாய்​களின் எண்​ணிக்​கையை கருத்​தில் கொண்​டு, இனப்​பெருக்க தடை அறுவை சிகிச்சை பணி​களை துரித​மாக மேற்​கொள்ள கூடு​தலாக நாய் பிடி வாக​னங்​களை உடனடி​யாக கொள்​முதல் செய்​ய​வும், அதற்கு தேவை​யான பணி​யாளர்​களை நியமிக்​க​வும் பெருநகர சென்னை மாநக​ராட்சி மற்​றும் இதர உள்​ளாட்சி அமைப்​பு​கள் நடவடிக்கை மேற்​கொள்​ள​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த நடவடிக்​கைகளுக்​காக உள்​கட்​டமைப்பு வசதி​களை விரைந்து முடித்​து, செயல்​பாட்​டுக்கு கொண்டு வந்து நாய் இனப்​பெருக்​கத்தை கட்​டுப்​படுத்​தும் நடவடிக்​கைகளை அனைத்​துதுறை அலு​வலர்​களும் ஒருங்​கிணைந்து மேற்​கொள்​ள வேண்​டும்​ என்​று கூட்​டத்​தில்​ முதல்​வர்​ அறிவுறுத்​தி​னார்​. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x