சென்னை: பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு பொடி தூவப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக சென்னை மேயர் பிரியா அளித்த விளக்கத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை புளியந்தோப்பில் மேயர் பிரியா இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு தூவப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து செய்தியாளர் ஒருவர் மேயர் பிரியாவிடம் அந்த பவுடரை காண்பித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மேயர், ‘இதில் பிளீச்சிங் பவுடர் வாசனைதான் வருகிறது. இது பிளீச்சிங் பவுடர்தானே? அப்புறம் இது என்ன பான்ஸ் பவுடரா?. நீங்கள் என்னுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். சரியான விதத்தில் என்னிடம் பேசுங்கள்” என்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இதுகுறித்து பேசிய அவர், “தமிழக அரசு சார்ப்பில் கொள்முதல் செய்யப்படும் பிளீச்சிங் பவுடரை தான் சென்னை மாநகராட்சி பகுதிகளில் பயன்படுத்துகிறோம். இதில் சுண்ணாம்பு பவுடர் கலக்கப்பட்டதா என விசாரணை நடத்த உத்தரவிடப்படும்” என்றார்