நாளை சிறப்பிக்கும் வகையில் 'தமிழ் வெல்லும்' என்ற பெயரில் பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வாரமாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக ‘தமிழ் வெல்லும்’ என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகளும் அவற்றுக்கான விதிமுறைகளும் பின்வருமாறு:
பேச்சுப் போட்டி: ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’, ‘உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!’, ‘பாரடா உனது மானிடப் பரப்பை!’, ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்’, ‘ஒரு கதை சொல்லட்டுமா’ ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் படைப்புகள் வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைய வேண்டும். (3 நிமிடம்).
கவிதைப் போட்டி: ‘தமிழே! தமிழர் உயிரே!’, ‘வரிப் புலியே தமிழ் காக்க எழுந்திரு!’, ‘இனிமைத் தமிழ்மொழி எமது!’, ‘தமிழும் நானும்’ ஆகிய 4 தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் ஒரு பக்க அளவில் கவிதைகள் அமைய வேண்டும். கவிதைகளை பிடிஎப் கோப்பில் அனுப்ப வேண்டும்.
கட்டுரைப் போட்டி: ‘புதியதோர் உலகு செய்வோம்’, ‘துறைதோறும் தொண்டு செய்வாய்!’, ‘அறிவை விரிவு செய்!’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரை எழுதி பிடிஎப் கோப்பில் அனுப்ப வேண்டும்.
ஓவியப் போட்டி பாவேந்தரின் கவிதைகள், காவியங்கள், நாடகங்களைக் கருவாகக் கொண்டு ஓவியங்கள் அமைய வேண்டும். ஓவியங்களை பிடிஎப் கோப்பாக அனுப்ப வேண்டும்
ஒப்பித்தல் போட்டி: பாவேந்தரின் ‘தமிழியக்கம் நூலிலிருந்து கரும்பு தந்த தீஞ்சாறே, ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் பாடல்களை பரிந்துரைக்கலாம். படைப்பு வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைய வேண்டும். (3 நிமிடம்).
போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் படைப்புகளை tndiprmhtamilvellum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மே மாதம் 31-ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.