‘உங்களை பார்த்தால் பதற்றமாக உள்ளது’ - முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் விஜய்!


மதுரை: மதுரையில் யாரும் என்னுடைய வேனுக்கு பின்னாலோ, காருக்கு பின்னாலோ பின் தொடர வேண்டாம். வேகமாக பைக்கின் மேல் நின்றுகொண்டும், தலைக்கவசம் அணியாமல் என் காருக்கு பின்னால் நீங்கள் வரும் போது எனக்கு பதற்றமாக இருக்கிறது என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்

தவெக கட்சியை தொடங்கிய பிறகு சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மதுரை விமான நிலையத்தில் என் தோழர்கள், தோழிகள் உள்ளனர். மதுரை மக்களுக்கு என் நன்றி. நான் இன்று என் வேலைக்காக, ‘ஜனநாயகன்’ படத்தின் சூட்டிங்கிற்காக மதுரை செல்கிறேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக நான் மதுரையில் உங்களை சந்திக்கிறேன்.

மதுரை விமான நிலையத்தில் இறங்கி உங்களை பார்த்துவிட்டு எனது வேலையை பார்க்க கிளம்பி விடுவேன். நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்.

யாரும் என்னுடைய வேனுக்கு பின்னாலோ, காருக்கு பின்னாலோ பின் தொடர வேண்டாம். வேகமாக பைக்கின் மேல் நின்றுகொண்டும், தலைக்கவசம் அணியாமல் என் காருக்கு பின்னால் நீங்கள் வரும் போது எனக்கு பதற்றமாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

x