தென்காசி: கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. 7ம் நாள் முகாமில் ‘கதை கேளு’ நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரும் நல்லாசிரியருமான சங்கர் ராம் கோமாளி வேடமிட்டு கதைகளை கூறினார். கதைகளை எப்படி உருவாக்க வேண்டும் எனவும், குழந்தை பருவத்தில் கதை சொல்வதால், கேட்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசினார்.
முன்னதாக தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் வரவேற்று பேசினார். ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார். கோடைகால பயிற்சி முகாம் ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெனிஷ்டா பொன் சுதா, சகுந்தலா என்ற ராஜகனி, உமா மகேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜயா மற்றும் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.