திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருமேனி ஏரி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன், மீனா தம்பதியின் மகள் அனுஷ்கா (13). 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று வீட்டில் இருந்த போது, வீட்டின் பின்புறம் இருந்த மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால், அனுஷ்கா அலறிய சப்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், அவரை மீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி அனுஷ்கா உயிரிழந்தார்.