சிதம்பரம்: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி அம்மன் கோயிலில் வழிபாடு செய்த கிராம மக்கள்!


கடலூர்: சிதம்பரம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரி , கிராம மக்கள் அம்மன் கோயிலில் வழிபாடு செய்தனர்.

சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வையூர் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக கடும் குடிநீர் பஞ்சம் இருந்தது. இந்நிலையில், ‘கிராம மக்கள், அரசு அதிகாரிகள் தான், குறையை தீர்க்கவில்லை, கடவுளே நீயாவது எங்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்’ என்று அம்மன் கோயிலில் வினோத வழிபாடு செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வையூர் கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், அந்த கிராமத்தில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கடந்த மூன்று மாதங்களாக மோட்டார் பழுது காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்து கோரிக்கை வைத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (ஏப்.29) காலை 11 மணி அளவில் ஒன்று திரண்ட கிராம மக்கள் நந்திமங்கலம்- சிதம்பரம் சாலையில் காலிக் குடங்களை சாலையில் வைத்து குடிநீர் வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் காலி குடங்களை தலையில் சுமந்து அதே பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதனைத் தொடர்ந்து கோயில் முன்பு சூடம் ஏற்றி, ‘அதிகாரிகள் எங்கள் குறைகளை போக்கவில்லை, கடவுளே நீயாவது எங்களது குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்’ என வினோத வழிபாடு செய்தனர்.

x