ஸ்கூட்டரில் மாடுகள் முட்டி குழந்தையோடு கீழே விழுந்த தம்பதி: காரைக்குடி அதிர்ச்சி


காரைக்குடியில் ஸ்கூட்டரில் மாடுகள் முட்டியதில் குழந்தையோடு கணவன், மனைவி கீழே விழுந்தனர். சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

காரைக்குடி மாநகராட்சியில் நாளுக்கு நாள் நாய்கள், மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டுநர்கள் சிரமமடைந்து வருகின்றனர். மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் அவற்றை கண்டுகொள்ளவில்லை. நேற்று முன்தினம் இரவு 100 அடி சாலையில் இரண்டு மாடுகள் மோதிக் கொண்டன.

அப்போது மாடுகள் மோதியதில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் கீழே சாய்ந்தன. அங்கிருந்த வியாபாரிகள் மாடுகளை பல முறை விரட்டியும், சண்டை தொடர்ந்தது. அப்போது அவ்வழியாக வந்த ஸ்கூட்டர் மீது இரு மாடுகளும் மோதின. இதில் குழந்தையோடு வந்த கணவன், மனைவி கீழே விழுந்தனர். அவர்களை அங்கிருந்தோர் மீட்டனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்கில் பரவி வருகிறது. காரைக்குடியில் சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

x