ராமேசுவரம் ரயில் நிலையத்தில் 'பேட்டரி' கார் அறிமுகம்: பயணிகள் மகிழ்ச்சி


ராமேசுவரம்: ராமேசுவரம் ரயில் நிலையத்தில், பயணியர் வசதிக்காக, 'பேட்டரி' கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 6 அன்று பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்துவைத்து அர்ப்பணித்தை தொடர்ந்து, ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ராமேசுவரத்திலிருந்து மதுரை, திருச்சி, சென்னை, கோவை, கன்னியாகுமரி மற்றும் வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.

மேலும், ராமேசுரம் ரயில் நிலையத்தை தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மாற்று திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக, ஏழு பேர் அமரக் கூடிய வகையில் பேட்டரி கார் வசதி தற்போது ராமேசுவரம் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததும் , மற்றொரு பேட்டரி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

x