தஞ்சாவூர்: பூதலூரைச் சேர்ந்தவர் சம்பத் மகன் லோகேஷ் (16). 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். கோடை விடுமுறையையொட்டி தாய் தமிழரசியுடன் பாட்டி ஊரான விண்ணமங்கலத்துக்குச் சென்றிருந்தார்.
அங்கு நேற்று முன்தினம் இரவு மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்த போது, மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். லோகேஷின் அலறல் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு பூதலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர், பரிசோதித்து லோகேஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.