தூத்துக்குடி: அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல்நீர் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கியது.
பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதியில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கம்.
இந்நிலையில் நேற்று அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் பகுதியில் கடல்நீர் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னர் மாலையில் கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்பியது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி வழக்கம் போல் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.