அரசு மருத்துவமனைகளில் சிடி, எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு ‘யுபிஐ’ மூலம் பணம் செலுத்தலாம்: நோயாளிகள் வரவேற்பு


சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் கட்டணத்தை யுபிஐ, ஜிபே மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளில் சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் நிர்வகித்து வருகிறது. சி.டி ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.500, எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் ஸ்கேன் மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்கேன்மையங்களுக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் நோயாளிகள் பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ள வசதியாக. சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு யுபிஐ
மற்றும் ஏடிஎம் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நோயாளிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து மருத்துவஅதிகாரி கள் கூறும்போது.அரசு மருத்துவ மனைகளில் சி.டி ஸ்கேன். எம்.ஆர்.ஐ ஸ்கேன் கட்டணத்தை யுபிஐ மூலம் செலுத்தும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் பணம் இருந்தும். கையில் குறைவான பணம் மட்டுமே வைத்திருக்கும் நோயாளிகளுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்றனர்.

x