அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் முன்பணம்: ஜாக்பாட் அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!


சென்னை: அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கும் வகையில் 2% அகவிலைப்படி உயர்வு 2025 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து வழங்கப்படும்.

அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை இந்த ஆண்டே, அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை ரூ.500-லிருந்து ரூ.1000-ஆக உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக இரட்டிப்பு.பொங்கல் போனஸ் மற்றும் சி, டி பிரிவு ஓய்வூதியம் ரூ.1,000 ஆக அதிகரிப்பு.


பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதிகாண்(Probation) பருவத்தையும் கணக்கில் எடுக்கலாம்.

பெண் ஊழிர்கள் பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிப்பு.

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு.

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம் முன்பணம் வழங்கப்படும்.அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கலை மற்றும் பாலிடெக்னிக் பயில ரூ.50,000 முன்பணம் வழங்கப்படும்.

ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்வு.

இதோடு, பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு, செப்டம்பரில் அறிக்கை அளிக்கும்

x