பாஜக, பாமக இருக்​கும் அணி​யில் இடம்​பெற மாட்​டோம்: திருமாவளவன் திட்​ட​வட்​டம்


புதுச்​சேரி: பாஜக, பாமக இருக்​கும் அணி​யில் ஒரு​போதும் விடு​தலை சிறுத்​தைகள் கட்சி இடம்​பெறாது என்று அக்​கட்​சி​யின் தலை​வர் தொல்​.​திரு​மாவளவன் கூறி​னார்.

புதுச்​சேரி திரு​புவனை​யில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற அம்​பேத்​கர் சிலை திறப்பு விழா​வில் தொல்​.​திரு​மாவளவன் பேசி​ய​தாவது: நாங்​கள் திமுக​வுடன் தொடர்ந்து பயணிக்​கிறோம் என்​ப​தையே, பலர் கேலி பேசுகிறார்​கள். கூட்​ட​ணிக்​காக எந்த கதவை​யும் நான் திறந்து வைத்​திருக்​க​வில்​லை. ஒரே நேரத்​தில் 2 அணி​களி​லும் பேசும் ராஜதந்​திர​மும் எனக்​குத் தெரி​யாது. பாஜக, பாமக இருக்​கும் அணி​யில் ஒரு​போதும் விடு​தலை சிறுத்​தைகள் கட்சி இடம்​பெறாது.

நான் இருக்​கும் அணி பலவீனப்​பட்​டால், அது பாஜக​வுக்கு சாதக​மாக மாறி​விடும் என்​பதை உணர்ந்​து​தான், விஜய் நடத்​திய புத்தக வெளி​யீட்டு விழாவைப் புறக்​கணித்​தேன்.

ஆட்​சி​யில் பங்​கு, துணை முதல்​வர் பதவி என்​றெல்​லாம் ஆசை வார்த்​தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடி​யாது. சாதி ஒழிப்​பு, சகோ​தரத்​து​வம், சமத்​து​வம் மற்​றும் இடஒதுக்​கீட்​டுக்கு எதி​ரான கட்சி பாஜக மட்​டும்​தான். சாதி வழக்​கத்தை எதிர்த்து ஆர்​எஸ்​எஸ் இயக்​கம் என்​றைக்​காவது போராடியது உண்​டா? இவ்​வாறு திரு​மா வளவன் கூறினார்.

x