மறைந்த போப்பின் இறுதிச் சடங்கில், தமிழக அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் எம்எல்ஏ இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையிலும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார்.
மேலும், போப் உடலுக்கு தமிழக அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் எம்எல்ஏ இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் வாடிகன் சென்று நேரில் அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.