பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கால் இடறி கீழே விழுந்தார். தகவல் அறிந்து முதல்வர் ஸ்டாலின் பேரவைக்கு விரைந்து வந்து, துரைமுருகனிடம் நலம் விசாரித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு துறை அமைச்சர்கள் பதில் அளித்துக்கொண்டிருந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துக்கொண்டிருந்தபோது, அமைச்சர் துரைமுருகன் எழுந்து வெளியில் செல்ல முயன்றார். இரு மேசைகளுக்கு இடையே குறுகலான வழியில் நுழைந்து செல்லும்போது கால் இடறி கீழே விழுந்தார். அதை பார்த்ததும் கட்சி பேதமின்றி உறுப்பினர்கள் அனைவரும் பதறியபடி அவரை நோக்கி சென்றனர். சிலர் அவரை தூக்கி நிற்க வைத்தனர். அதன் பின்னர் அவராகவே நடந்து வந்து, தனது இருக்கையில் அமர்ந்து குடிநீர் அருந்தினர்.
அப்போது அருகில் அமர்ந்திருந்த உதயநிதி, துரைமுருகனிடம், இப்போது எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார். அந்த நேரத்தில் தனது அறையில் இருந்த முதல்வர் ஸ்டாலின், தகவல் அறிந்து விரைந்து வந்து துரைமுருகனிடம் நலம் விசாரித்தார். தான் நலமாக இருப்பதாகவும், எழுந்து சென்றபோது கால் இடறி கீழே விழுந்துவிட்டதாகவும் துரைமுருகன் விளக்கினார். இதனால் அவையில் சிறிது நேரம் அமைதி நிலவியது. பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதிலை தொடர்ந்தார்