முன்னாள் எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: ​முன்​னாள் எம்​எல்​ஏ.க்​களின் ஓய்​வூ​தி​யம், மருத்​து​வப்​படி உயர்த்​தப்​படு​வ​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​துள்​ளார்.

சட்​டப் பேர​வை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: முன்​னாள் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களு​டைய ஓய்​வூ​தி​யத்​தை​யும், மருத்​து​வப்​படியை​யும் உயர்த்த வேண்​டும் என்று கோரிக்​கைகள் வந்​தன. அதன்​படி, முன்​னாள் சட்​டப்​பேரவை மற்​றும் மேலவை உறுப்​பினர்​களுக்கு தற்​போது வழங்​கப்​பட்டு வரும் மாத ஓய்​வூ​தி​யம் ரூ.30 ஆயிரத்​தில் இருந்து ரூ.35 ஆயிர​மாக உயர்த்​தப்​படும்.

அதே​போல், குடும்ப ஓய்​வூ​தி​யம் மாதம் ஒன்​றுக்கு ரூ.15,000 என்​பது, ரூ.17,500 உயர்த்​தப்​படும். தற்​போது ஆண்டு ஒன்​றுக்கு வழங்​கப்​பட்டு வரும் மருத்​து​வப்​படி ரூ.75 ஆயிரத்​தில் இருந்து ஒரு லட்​சம் ரூபா​யாக உயர்த்தி வழங்​கப்​படும். இவ்​வாறு முதல்​வர் அறி​வித்​துள்​ளார்​.

x