திரைப்பட இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்; வாடிய முகத்துடன் நின்ற சீமான்


சென்னை: திரைப்பட இயக்குநர் நாகேந்திரன், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் உட்பட பல முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன், 2015 ஆம் ஆண்டு வெளியான ‘காவல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் விமல், சமுத்திரகனி, எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வசூலில் தோல்வியை சந்தித்தது.

இதன் பின்னர் நாகேந்திரன் திரைப்படம் இயக்கவில்லை. இருப்பினும் மற்ற இயக்குநர்களின் படங்களில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே திடீர் மாரடைப்பு காரணமாக நாகேந்திரன் மரணமடைந்தார். இயக்குநர் நாகேந்திரன் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நெருக்கமானவராக இருந்தார். நாகேந்திரனின் உடலுக்கு சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

x