நீதிமன்ற தீர்ப்பால் மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை: கோவி.செழியன்


சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாகவே ஆளுநர் கூட்டிய மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை என்று அமைச்​சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: ‘துணை வேந்​தர்​கள் மாநாட்​டில் பங்​கேற்​கக்​கூ​டாது என அரசு பல்​கலைக்​கழகத் துணைவேந்​தர்​கள் மிரட்​டப்​பட்​டுள்​ளனர்’ என ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​யுள்​ளார். இதற்​கு​முன் அவர் கூட்​டிய துணைவேந்​தர்​கள் மாநாட்​டில் பங்​கேற்ற துணைவேந்​தர்​கள் இப்​போது ஏன் பங்​கேற்​க​வில்​லை? தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2-வது முறை​யாக நிறைவேற்றி அனுப்​பப்​பட்ட 10 மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ரவி ஒப்​புதல் அளிக்​காத​தால், அரசி​யல் சாசனத்​தின் 142-வது பிரிவைப் பயன்​படுத்தி உச்ச நீதி​மன்​றம் ஒப்​புதல் அளித்​தது. ஆளுந​ரால் அனுப்பி வைக்​கப்​படும் மசோ​தாக்​கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலை​வருக்​கும் காலக்​கெடு நிர்​ண​யித்​தது.

இந்​தத் தீர்ப்​புக்​குப் பிறகு​தான் தமிழக அரசுடன் மல்​லுக்​கட்ட, துணைவேந்​தர்​கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்​டி​யிருக்​கிறார். உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பை அறிந்து மாநாட்​டைத் துணைவேந்​தர்​கள் புறக்​கணித்​துள்​ளனர். இதற்கு எப்​படி மாநில அரசு பொறுப்​பாகும், ஆளுநர் ரவி​தான் சட்​டத்தை மதிக்​காமல் மாநாட்​டைக் கூட்​டி​னார் என்​றால், துணைவேந்​தர்​களும் அப்​படியே நடக்க வேண்​டு​மா? தமிழக அரசு எதை​யும் சட்டரீதி​யாகத்​தான் எதிர்​கொள்​ளும். அப்​படித்​தான் மசோ​தாக்​கள் விவ​காரத்​தில் வெற்றி பெற்​றோம்.

ஆளுநர்​கள் அந்​தந்த மாநிலப் பல்​கலைக்​கழகங்​களில் வேந்​த​ராக இருப்​பது குறித்து அரசமைப்​புச் சட்​டத்​தில் எது​வும் சொல்​ல​வில்​லை. குடியரசுத் தலை​வருக்​கும் காலக்​கெடு நிர்​ண​யித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டிருப்​ப​தைத் தாங்​கிக்​கொள்ள முடி​யாமல், குடியரசுத் துணைத்​தலை​வரைத் துணைக்கு அழைத்​துக் கொண்டு ஊட்டி சென்​றுள்​ளார் ஆளுநர் ரவி.

மோடி பிரதமர் ஆனபிறகு பாஜக​வுக்​குப் பிடிக்​காத, அவர்​களை எதிர்க்​கும் மாநில அரசுகளை ஆளுநர்​கள் மூலம் குடைச்​சல் கொடுத்து கொண்​டிருக்​கிறார். அரசி​யல்​வா​தி​களை ஆளுநர்​களாக நியமிக்​கக் கூடாது என்று சொன்ன மோடி​யின் அரசு​தான், ஆளுநர்​களை வைத்து அரசி​யல் செய்​கிறது. மிரட்​டல் அரசி​யல் என்​பது உங்​கள் டி.என்​.ஏ.​வில் இருக்​கலாம். ஆனால், துணிந்து மாநில உரிமை​களுக்​காக எதிர்த்து நிற்​பது​தான் எங்​கள் டி.என்​.ஏ.​வில்​ இருக்​கிறது.இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

x