சென்னை: சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீஸார் எடப்பாடி பழனிசாமி வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனா். இதனால் எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்தவுடன் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.