துபாயில் நாளை ஐபிஎல் மினி ஏலம்... தமிழக வீரர்கள் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள்?


ஐபிஎல் கோப்பை

உலகின் நம்பர் கிரிக்கெட் லீக் தொடராக கருத்தப்படுவது ஐபிஎல். இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே வரையில் 16வது சீசன் நடைபெறுகிறது. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி தொடங்கவுள்ளதால், அதற்கு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் இந்த ஐபிஎல் தொடர் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ஏலம்

கடந்த தொடரை போன்று இந்த முறையும் 10 அணிகள் மோதவுள்ளன. இதையொட்டி அனைத்து அணிகளும் முக்கிய வீரர்களைத் தக்க வைத்துக்கொண்டதுடன், சில வீரர்களை விடுவித்தன. கால்பந்து போட்டிகளில் உள்ளது போல் டிரேடிங் முறையில் வீரர்கள் மாற்றமும் செய்யப்பட்டது.

குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் மும்பை அணிக்கு மாற்றப்பட்டதுடன் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் ஏலம்

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு மினி ஏலம் துபாயில் நாளை நடத்தப்படவுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 333 வீரர்கள் பங்கேற்கும் இந்த ஏலத்தில் 214 பேர் இந்தியாவையும், 119 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள்.

அதில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 77 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர். வெளிநாட்டு வீரர்களை அதிகபட்சமாக 30 பேர் வரை ஏலத்தில் எடுக்கலாம். துபாயில் நாளை அந்நாட்டு நேரப்படி காலை 11.30 மணிக்கும், இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கும் ஏலம் தொடங்கவுள்ளது.

தமிழக வீரர் ஷாருக்கான்

இதில் தமிழகத்தை சேர்ந்த ஷாரூக்கான், சித்தார்த், சந்தீப் வாரியர், பாபா அபராஜித், பாபா இந்திரஜித், பிரதோஷ் பால், அஜிதேஷ், ரித்திக் ஈஸ்வரன், குர்ஜப்னீத் சிங், ஜதாவேத் சுப்ரமணியன், பி. சூர்யா ஆகிய 11 வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் அதிரடி பேட்ஸ்மேன் ஷாரூக்கானை ஏலத்தில் எடுப்பதற்கு அணிகள் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை அணியில் ஷாரூக்கான் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


பரபரப்பு... ஆளுநருக்கு எதிராக கல்லூரிகளில் பேனர்! களத்தில் இறங்கிய மாணவர் அமைப்பு!

x