இந்தியாவிற்கு 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கவுகாத்தியில் நடைபெறும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற 2 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அதனால், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பயமின்றி விளையாடி ஆஸ்திரேலிய வீரர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது. அதேபோல், ஆஸ்திரேலிய அணியிலும் அனுபவ வீரர்கள் இன்றி புதிய வீரர்கள் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
குஷ்பு புகைப்படம் மீது சாணி வீசி, துடைப்பத்தால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்!
பகீர்... 31 துண்டுகளாக வெட்டிப் புதைக்கப்பட்ட பட்டியலின பெண்: கணவன், மனைவி கைது!
மற்றுமொரு ‘நீட்’ தற்கொலை... தொடரும் ‘கோட்டா’ துயரங்களில் இந்த வருடத்தில் இது 28-வது உயிர்ப்பலி
அச்சச்சோ...விராட் கோலி மூக்கில் பிளாஸ்திரி, முகத்தில் காயம்!