மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்படுகிறாரா ரோகித் ஷர்மா? - ரசிகர்கள் அதிர்ச்சி!


ஐபிஎல் மும்பை இந்தியன் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் ஷர்மாவுக்கு கல்தா கொடுத்துவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளில் ஒன்று. இதுவரை ரோஹித் ஷர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணியின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

கேப்டன் ரோகித் ஷர்மா

இந்நிலையில் டிசம்பர் 19 ஆம் தேதி நடக்க உள்ள மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரர்களை எல்லாம் எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில் அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவையே விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு தகவலின் படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை தங்கள் அணிக்கு மாற்றிக் மொள்ள மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா

குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி மும்பை அணிக்காக கடந்த 2022ம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக கடந்த இரண்டு சீசன்களிலும் பெரிய அளவு விளையாடவில்லை. அதன் காரணமாக அவரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியானது ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தங்களது அணியில் இணைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x