சென்னையில் நாளை ரஞ்சி கோப்பைக் கிரிக்கெட்... ரசிகர்களுக்கு இலவச அனுமதி!


சேப்பாக்கம் மைதானம்

சென்னையில் நடைபெற உள்ள ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் டிக்கெட் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கப்படுவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு, கர்நாடக கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் போட்டி நாளை பிப்ரவரி 9ம் தேதி துவங்கி பிப்ரவரி 12 ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இதற்கு நுழைவு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானம்

மைதானத்தின் நான்காவது நுழைவாயில் வழியாக உள்ளே அனுமதிக்கப்படும் ரசிகர்கள், C, D, E ஆகிய கேலரிகளில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை இலவசமாக கண்டு ரசிக்கலாம் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

x