முதல் டெஸ்ட் கிரிக்கெட்; வலுவான நிலையில் இந்தியா... கடுமையாக போராடும் இங்கிலாந்து அணி!


இங்கிலாந்து அணி பேட்டிங்

முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி கடும் போராட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்திய அணி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

80 ரன்கள் கடந்த இந்திய வீரர்கள்

டாஸ் வென்று களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிபட்சமாக 70 ரன் எடுத்தார். இந்தியா சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 436 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 80 ரன்களும், கேஎல் ராகுல் 86 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 87 ரன்களும் எடுத்தனர். ஒரே இன்னிங்ஸில் 3 இந்திய வீரர்கள் 80க்கும் கூடுதலான ரன்கள் எடுத்தது சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணி

இதைத்தொடர்ந்து, தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன் எடுத்திருந்தது. அந்த அணி சார்பில் ஒலி போப் 148 ரன்னுடனும், ரெஹன் அஹ்மத் 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்தியாவை விட 126 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x