புனித வெள்ளி: ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரை தேவாலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு 


ராமேசுவரம் ஓலைக்குடா பகுதியில் இன்று நடைபெற்ற சிலுவைப் பாதை வழிபாடு.

ராமேசுவரம்: புனித வெள்ளியை அனுசரிக்கும் வகையில், ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரை தேவாலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்வு இன்று நடைபெற்றது.

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாள் தவக்காலமாக அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டு மார்ச் 5ல் தவக்காலம், சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தில் தவக்கால தியானம், நடைபயணம், திருப்பயணம், சிலுவை பயணம் உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது.

ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை வழிபாடு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலயத்தின் பங்குத்தந்தை ஜான்சன் பிரிட்டோ தலைமை வகித்தார். அருட்தந்தை லூயி டிஸ்சோசா முன்னிலை வகித்தார்.

இந்த சிலுவைப் பாதையின் போது, இயேசுநாதர் சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோல்களில் பாரமான சிலுவையை சுமந்தும், சிலுவையில் அறைந்து கொண்டு தங்களை வருத்திக் கொண்டனர். இதில் ஏராளமானமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தங்கச்சிமடம் புனித தெரசாள் பங்கு ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு நிகழ்வுகளாக இன்று மாலை திருச்சிலுவை பாதை, திருச்ச்சிலுவை முத்தி செய்தல் அதனைத் தொடர்ந்து இரவு இயேசுவின் வாழ்க்கை வரலாறு பாஸ்கா நாடகம், ஆசந்தி பவனி ஆகியவை நடைபெற்றது.

x