சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. (அடுத்த படம்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப் பெருமான்.

ஈரோடு: சென்​னிமலை முரு​கன் கோயி​லில், பங்​குனி உத்​திர தேர்த் திரு​விழா கொடியேற்​றத்​துடன் நேற்று தொடங்​கியது. கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய பெரு​மைக்​குரிய, ஈரோடு மாவட்​டம் சென்​னிமலை முரு​கன் கோயி​லில் ஆண்​டு​தோறும் பங்​குனி உத்​திர தேர்த் திரு​விழா விமரிசை​யாக நடை​பெறும். நடப்​பாண்டு திரு​விழா நேற்று காலை கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

இதையொட்​டி, நேற்று காலை சென்​னிமலை கைலாச​நாதர் கோயி​லில் இருந்து உற்சவ மூர்த்​தி​கள் மலைக் கோயிலுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். அங்கு உற்​சவர் மற்​றும் மூல​வருக்கு சிறப்பு அபிஷேகங்​கள் நடை​பெற்​றன. தொடர்ந்​து, பகல் 12.30 மணி​யள​வில் கோயி​லின் முன்​புள்ள கம்​பத்​தில் கொடியேற்​றப்​பட்​டது.

இன்று மாலை 6 மணிக்கு சென்​னிமலை கைலாச​நாதர் கோயி​லில் வள்​ளி-தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார​சாமி திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெறுகிறது. விழா​வின் முக்​கிய நிகழ்​வான பங்​குனி உத்​திர தேரோட்​டம் நாளை நடை​பெறுகிறது. கிழக்கு ராஜவீ​தி, தெற்கு ராஜ வீதி மற்​றும் மேற்கு ராஜ வீதி வழி​யாக நடை​பெறும் தேரோட்​டம் மாலை​யில் நிலையை அடைகிறது. இதில் ஏராள​மான பக்​தர்​கள் பங்​கேற்க உள்​ளனர். விழாவையொட்டி நாளை காலை அடி​வாரத்​தில் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​படு​கிறது.

வரும் 12-ம் தேதி காலை பரிவேட்​டை, இரவு தெப்​பத் தேரோட்​டம், 13-ம் தேதி காலைமகா தரிசனம் நடை​பெறுகிறது. அன்று மாலை மஞ்​சள் நீர் உற்​சவத்​துடன் விழா நிறை வடைகிறது. இதற்​கான ஏற்​பாடு​களை அறங்​காவலர் குழுத் தலை​வர் ர.பழனிவேல், கோயில் செயல் அலு​வலர் ஏ.கே.சர​வணன், கண்​காணிப்​பாளர் சி.​மாணிக்​கம் மற்றும் அறங்​காவலர் குழு உறுப்​பினர்​கள், கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

x