பழநி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் 3 நாட்களுக்கு ரத்து


சென்னை: பங்​குனி உத்​திரத்தை முன்​னிட்டு பழநி முரு​கன் கோயி​லில் ஏப்​ரல் 10, 11, 12-ம் தேதி​களில் கட்டண தரிசன முறை ரத்து செய்​யப்​படு​கிறது என்று இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தெரி​வித்​தார். சட்​டப்​பேர​வை​யில் திமுக உறுப்​பினர் ஆ.கிருஷ்ண​சாமி நேற்று கேள்வி நேரத்​தில் பேசும்​போது, “பங்​குனி உத்​திரத்​தில் முரு​கனை தரிசிக்க பல லட்​சம் பக்​தர்​கள் குவி​கின்​றனர். தைப்​பூச நாளில் பழநி ஆண்​ட​வர் கோயி​லில் 3 நாட்​களுக்கு கட்​ட​ணமில்லா தரிசனத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. அதே​போல, பங்​குனி உத்​திரத்​துக்​கும் முருக பக்​தர்​களுக்கு கட்​டணமில்லா தரிசனம் ஏற்​பாடு செய்​யப்​படுமா?” என்​றார்.

இதற்கு அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு பதில் அளித்து பேசும்​போது, “சட்​டப்​பேரவை உறுப்​பினர் கோரிக்கை உடனடி​யாக ஏற்​கப்​படு​கிறது. பங்​குனி உத்​திரத்தை முன்​னிட்டு பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி திருக்​கோயி​லில் ஏப்​ரல் 10, 11 மற்​றும் 12-ம் தேதி​களில் தரிசனம் செய்​வதற்கு கட்டண முறை ரத்து செய்​யப்​படு​கிறது’’ என்று தெரி​வித்​தார்​.

x