திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூத்தேர் பவனி விழா இன்று சிறப்புடன் நடைபெற்றது.

திண்டுக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில், அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூத்தேர் விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து பூத்தேர் வீதி உலா நடந்தது. கோவில் பிரகாரத்தில் இருந்து கிளம்பிய பூத்தேர் நான்கு ரத வீதிகள் வழியாக சென்றது. விநாயகர், சிவன் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்த தேர் முன்னே செல்ல பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட தேர் பக்தர்கள் கூட்டத்தில் மிதந்து சென்றது. தேரின் முன்பு பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

தேரில் வீற்றிருந்த அம்மனுக்கு பக்தர்கள் மலர்களை காணிக்கையாக வழங்கினர். மேள,தாளங்கள் முழங்க ரத வீதிகள் வழியாக சென்ற அம்மன் பூத்தேரினை காண்பதற்காக திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வானது விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளை செய்திருந்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
அரசியல் மாநாடு... விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!
நெகிழ்ச்சி... தாயின் கல்லறை முன் மனைவிக்கு தாலி கட்டிய மகன்!
திருவிழாவில் பயங்கரம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை!
மகளுக்குக் கொடுத்த 'லால்சலாம்' வாய்ப்பு...தோல்வியில் முடிந்தும் சோகத்தை வெளிக்காட்டாத ரஜினி!