ரோப் கார் சேவை இந்த 2 நாட்கள் நிறுத்தம்... பழநி கோயில் நிர்வாகம் அறிவிப்பு!


ரோப் கார் சேவை

பழநி மலைக்கோயில் ரோப் கார் நாளையும், நாளை மறுநாளும் (பிப்ரவரி 20,21) இயங்காது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழநி முருகன் கோயில்

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான இக்கோயில், புகழ்பெற்ற ஆன்மில தலமாக திகழ்கிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் இக்கோயிலுக்கு வருகின்றனர். இந்த மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக படி வழியாக பாதை, வின்ச், ரோப் கார் என மூன்று வழிகளில் செல்கின்றனர்.

இதில் ரோப் கார் மூலம் இரண்டு நிமிடங்களில் மலையைச் சென்று விடலாம். இதனால் பக்தர்கள், ரோப் கார் மூலம் மலைக்குச் செல்ல விரும்புகின்றனர்.

ரோப் கார் சேவை

இந்த ரோப் கார் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் வருடாந்திர பராமரிப்புக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. ரோப் கார்களில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x