கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்: அரவான் களப்பலி கண்டதும் திருநங்கைகள் சோகம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்​தூர்​பேட்டை அடுத்த கூவாகத்தில் நேற்று நடைபெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள். (உள்படம்) தேரோட்டத்துக்கு முன்பு கொண்டு வரப்பட்ட அரவான் சிரசு. | படங்கள்: எம்.சாம்ராஜ் |

விழுப்புரம்: உளுந்​தூர்​பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்​தில் பிரசித்தி பெற்ற கூத்​தாண்​ட​வர் கோயில் சித்​திரைத் தேரோட்​டம் நேற்று விமரிசை​யாக நடை​பெற்​றது. கூவாகத்​தில் கடந்த ஏப். 29-ம் தேதி சித்​திரைத் திரு​விழா தொடங்​கியது.

விழா​வின் முக்​கிய நிகழ்​வான அரவான் சுவாமி (கூத்​தாண்​ட​வர்) திருக்​கண் திறத்​தல் மற்​றும் திருநங்​கைகள் மாங்​கல்​யம் ஏற்​றுக் கொள்​ளும் நிகழ்வு நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. பல்​வேறு மாநிலங்​களில் இருந்து வந்​திருந்த ஆயிரக்​கணக்​கான திருநங்​கைகள், அரவானை கணவ​ராக ஏற்று மங்கல நாண் தரித்​தனர். திரு​மணம் உள்​ளிட்ட நேர்த்​திக் கடனுக்​காக ஆண்​கள் உள்​ளிட்ட பக்​தர்​களும், கோயில் பூசாரி கையால் தாலியை கட்​டிக் கொண்​டனர்.

நேற்று அதி​காலை கோயி​லில் உள்ள அரவான் சிரசுக்கு மாலை அணி​வித்​து, ஊர்​வல​மாக கோயி​லின் வடக்கே நிலை நிறுத்​தப்​பட்​டிருந்த சகடைக்கு எடுத்து வந்​தனர். அங்கு 30 அடி உயர கம்​பம் நட்​டு, வைக்​கோல் சுற்​றப்​பட்​டது. பின்​னர் 3 கிராமங்​களில் இருந்து கொண்டு வரப்​பட்ட புஜங்​கள், மார்பு பதக்​கம், அரசிலை, பாதம், கைகள், கயிறு, கடை​யாணி உள்​ளிட்​ட​வற்றை கொண்டு அரவானின் திருஉரு​வம் வடிவ​மைக்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, தேரோட்​டம் தொடங்​கியது. உளுந்​தூர்​பேட்டை எம்​எல்ஏ மணிக்​கண்​ணன் மற்​றும் திரளான பக்​தர்​கள் வடம் பிடித்து தேர் இழுத்​தனர். பக்​தர்​களின் வெள்​ளத்​தில் 4 மாட வீதி​களில் வலம் வந்த திருத்​தேர் பின்​னர் நிலைக்​குத் திரும்​பியது. விவ​சா​யிகள் விளை பொருட்​கள் மற்​றும் தேங்​காய்​களை சூறை​யிட்டு வேண்​டிக் கொண்​டனர். திருநங்​கைகளும், பக்​தர்​களும் அரவான் மீது பூக்​களைத் தூவினர். பின்​னர், அழிகளம் நோக்கி தேர் புறப்​பட்​டது. தேரைப் பின்​தொடர்ந்து திருநங்​கைகள் ஒப்​பாரி வைத்​துத் கொண்டு ஓடினர்.

அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும், தாலி அறுத்துக்கொண்ட திருநங்கைகள்.

நத்​தம்கிராமம் பந்​தலடி எனப்​படும் அழிகளத்​துக்கு திருத்​தேர் சென்​றதும், அரவான் களப்​பலி கொடுக்​கும் நிகழ்வு நடை​பெற்​றது. அப்​போது திருநங்​கைகள் தாலியை அறுத்​தும், வளை​யல்​களை உடைத்​தும், நெற்​றித் தில​கத்தை அழித்​தும், அங்​கிருந்த கிணற்​றில் தலைமூழ்​கினர். பின்​னர் வெள்​ளைப் புடவை உடுத்தி விதவைக்​கோலம் ஏற்​றனர். தங்​களது தாலியை கோயிலுக்கு காணிக்​கை​யாக செலுத்​தினர்.

மேலும் குழுக்​களாக இணைந்து ஒப்​பாரி​வைத்​து, அழுது புலம்​பியபடி சொந்த ஊருக்கு புறப்​பட்​டுச் சென்​றனர். நேற்று இரவு அரவான் உயிர்ப்​பிக்​கும் நிகழ்​வு, ஏரிக்​கரை காளி கோயி​லில் நடை​பெற்​றது. பின்​னர், பந்​தலடிக்கு தேர் கொண்டு வரப்​பட்​டது. அரவான் சிரசு மட்​டும் சிறப்பு அலங்​காரத்​துடன் நத்​தம், தொட்​டி, கூவாகம் கிராமங்​கள் வழி​யாக கோயிலுக்கு கொண்​டு​வரப்​பட்​டது. இன்று விடை​யாற்றி உற்​சவம், நாளை தர்​மர் பட்​டாபிஷேக நிகழ்ச்​சிகள்​ நடை​பெற உள்ளன. அத்​துடன்​ சித்​திரை திரு​விழா நிறைவடைகிறது.

x