மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்தின்போது கொடிக்கம்பம் அருகே எழுந்தருளிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர்.

மதுரை: மீ​னாட்சி அம்​மன் கோயில் சித்​திரைத் திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முக்​கிய நிகழ்​வான மீனாட்​சி-சுந்​தரேசுவரர் திருக்​கல்​யாண உற்​சவம் மே 8-ம் தேதி நடை​பெறுகிறது. திரு​விழாவை முன்​னிட்டு மதுரை மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. மதுரை​யில் நடை​பெறும் முக்​கி​யத் திரு​விழாக்​களில் ஒன்​றான மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயில் சித்​திரைத் திரு​விழா ஆண்​டு​தோறும் 12 நாட்​கள் நடை​பெறும். இந்த ஆண்டு திரு​விழா கொடியேற்​றத்​துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

முதல் நாளான நேற்று கொடியேற்​றம் நடை​பெற்​றது. இதற்​காக சுவாமி சந்​நி​தியில்​இருந்து மீனாட்சி அம்​மன், பிரி​யா​விடை சுந்​தரேசுவரர் தனித்​தனி​யாக வெள்ளி சி்ம்​மாசனத்​தில் கம்​பத்​தடி மண்​டபத்​தில் எழுந்​தருளினர். அங்​குள்ள தங்​கக் கொடி மரத்​தைச் சுற்​றி​லும் மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது.

காலை 10.48 மணி​யள​வில் தங்கக் கொடிமரத்​தில் கொடியேற்​றம் நடை​பெற்​றது. பின்​னர், தர்ப்​பைப்​புல், மலர்​களால் கொடிமரம் அலங்​கரிக்​கப்​பட்​டு, சிறப்பு அபிஷேகம், தீபா​ராதனை​கள் நடந்​தன. இதில் மாவட்ட ஆட்​சி​யர் சங்​கீ​தா, அறங்​காவலர் குழுத் தலை​வர் ருக்​மணி பழனிவேல்​ராஜன், மேயர் இந்​தி​ராணி, மாநக​ராட்சி ஆணை​யர் சித்​ரா, மாநகர காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதன், கோயில் இணை ஆணை​யர் ச.கிருஷ்ணன் ஆகியோர் பங்​கேற்​றனர். திரு​விழாவை முன்​னிட்டு மதுரை மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது.

முக்​கிய விழாக்​களான மீனாட்சி அம்​மனுக்கு பட்​டாபிஷேகம் மே 6-ம் தேதி இரவு 7.35 மணிக்​கும், மே 7-ம் தேதி திக் விஜய​மும் நடை​பெறும். மே 8-ம் தேதி காலை 8.35 மணி​யள​வில் மீனாட்​சி-சுந்​தரேசுவரர் திருக்​கல்​யாணம் கோலாகல​மாக நடை​பெறும். மே 9-ம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்​டம் நடக்​கிறது.

வைகையில் இறங்கும் கள்ளழகர்: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மே 10-ம் தேதி மாலை 6 மணி முதல் 6.15 மணிக்குள் அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்படுகிறார். மே 11-ம் தேதி மூன்று மாவடி யில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெறுகிறது. மே 12-ம் தேதி காலை 5.45 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு கள்ளழகர் அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

x