சிங்கப்பூர் போல மாறிய திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம்: வசதிகள் என்னென்ன?


படங்கள்: ர.செல்வமுத்துகுமார்.

திருச்சி: சர்வதேச விமான நிலையம்போல பல் வேறு அதிநவீன வசதிகளுடன் பரவசப் படுத்தும் வகையில் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சியில் திருச்சி மாநகராட்சி சார்பில், பஞ்சப்பூரில் 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.247 கோடி மதிப்பில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கி ணைந்த பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 9-ம் தேதி திறந்துவைக்க உள் ளார்.

இந்த பேருந்து முனையத்துக்கு நாள்தோறும் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பயணிகள் வரை வந்து செல்லும் வாய்ப்பு உள்ளதால், திருச்சி-மதுரை சாலையில் செல்லும் பிரதான குடிநீர் குழாயிலிருந்து நேரடியாக பேருந்து முனையத்துக்கு காவிரி குடிநீர் எடுத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

தனியாரிடம் பராமரிப்பு: இப்பேருந்து முனையத்தின் பராமரிப்பு பணிகளை 15 ஆண்டுக ளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனி யார் வசம் ஒப்படைக்கமாநகராட்சிநிர்வு கம் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை பராமரிப்பு பணிகளில் திருப்தி இல்லா விட்டால், தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படும் என்ற நிபந்த னையுடன் ஒப்பந்தம் விடப்படும் என மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஒழுகும் மேற்கூரை, துர்நாற்றமடிக்கும் கழிப்பிடங்கள், குண்டும் குழியுமான சாலை, குப்பை கூளங்கள் நிறைந்த நடைபாதை போன்ற வற்றை அனுபவித்து வந்த பயணி களை, பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒசதிகள் பரவசப்படுத்தும் என்பது உண்மை.

401 பேருந்துகள் நிறுத்தலாம்: தரைத் தளத்தில் 345 வெளியூர், நீண்டதூர நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் வசதி, முதல் தளத்தில் 56 நகரப் பேருந்துகள் நிறுத்த வசதி உள்ளன. இதுமட்டுமின்றி 78 கடைகள், 2 உணவகங்கள், 2 சிற்றுண்டிகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், பொருட்கள் வைப்பு அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

பிரம்மாண்ட பார்க்கிங்: தரைகீழ் தளம் முழுவதும் வாகன நிறுத்துமிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1,544 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம். வாகனங்களை நிறுத்திவிட்டு இங்கிருந்து தரைத் தளம், முதல் தளம் செ எஸ்கலேட்டர், லிப்ட், படிக்கட்டு வசதிகள் ஆகியவை 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தரைத் தளத்தில் 216 நான்கு சக்கர வாகனங்களையும், 391 இருசக்கர வாகனங்களையும் நிறுத்தும் வசதி உள்ளது.

குளிர்ந்த, சாதாரண, சுடுநீர்: 6 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த மற்றும் சுடுநீர் வழங்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தீத்தடுப்பு கருவி, தீ எச்சரிக்கை கருவி, இலவச வைஃபை, ஏடிஎம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முழுவதும் குளிரூட்டப்பட்ட தரைத்தளம்: இந்த பேருந்து முனையத்தில், 1.20 லட்சம் சதுரடி பரப்பளவு உள்ள தரைத் தளம் முழுவதும் பால்ஸ் சீலிங் செய்து, 704 டன் ஏசி மூலம் குளிரூட்டப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே பயணிகள் பயன்படுத்தும் தரைத் தளம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட முதலாவது பேருந்து முனையம் இது. மின்சாரம் தடைபட்டாலும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக தலா 500 கிலோ வாட் திறன் கொண்ட 4 ஜெனரேட்டர்கள் (மொத்தம் 2000 கிலோ வாட்) அமைக்கப்பட்டுள்ளன. இதே திறன் கொண்ட மின் மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளன.

எல்இடி அறிவிப்பு பலகைகள்: பேருந்து முனைய வளாகம் முழுவதும் 50 எல்இடி அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து முனையம் முழுவதும் 3-வது கண் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் 166 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு பிரம்மாண்ட சிலை: பஞ்சப்பூர் பேருந்து முனையம் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் சர்வதேச விமான நிலையம்போல உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்து முனையத்தின் முன்புறம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

கழிப்பிட வசதி: வளாகம் முழுவதும் சிறுநீர் கழிப்பிடம் 173, ஆண்களுக்கு 42, பெண்களுக்கு 59, திருநங்கைகளுக்கு 2, மாற்றுத் திறனாளிகளுக்கு 4 என்ற எண்ணிக்கையில் என மொத்தம் 107 நவீன கழிப்பிட இருக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. 4 குளியலறை வசதியும் உள்ளது. பேருந்து பயணிகளை ஏற்றி இறக்கும் இடத்தில் முன்பக்கம் 50 ஆட்டோகள். பின்பக்கம் 50 ஆட்டோக்கள் நிறுத்தும் வசதி உள்ளது.

x